www.asiriyar.net

Wednesday 11 October 2017

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பள உயர்வுக்கான அரசாணை இன்று மாலை வெளியிடப்படும் என்றும் இந்த ஊதிய உயர்வு இன்னும் 2 நாட்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது!!



7-ஆவதுஊதியக் குழு பரிந்துரையைதமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளதால் அரசுஊழியர்களுக்கு அடிப்படைஊதியம் 20% உயர்கிறது.கடந்த சில நாள்களுக்குமுன்பு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளைஅமல்படுத்தக் கோரி அரசுஊழியர்கள்-ஆசிரியர்களின்கூட்டமைப்பான ஜாக்டோஜியோ அமைப்புஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். இதற்குஉயர்நீதிமன்ற நீதிபதிகிருபாகரன் கடும்கண்டனம் தெரிவித்தார்.



இதுதொடர்பாக சென்னைஉயர்நீதிமன்றத்தில்தொடரப்பட்ட வழக்கில் 7-ஆவது ஊதிய குழுபரிந்துரைகளை அக். 13-ஆம் தேதிக்குள்அமல்படுத்த வேண்டும்என்று தமிழக அரசுக்குநீதிபதி உத்தரவிட்டார்.இந்நிலையில் தமிழகஅமைச்சரவைக் கூட்டம்தலைமை செயலகத்தில்முதல்வர் பழனிசாமிதலைமையில்நடைபெற்றது.இக்கூட்டத்தில், அரசுஊழியர்கள்,ஆசிரியர்களுக்கான 7-வதுஊதியக்குழு பரிந்துரைகள்குறித்து அமைக்கப்பட்டவல்லுனர் குழுவின்அறிக்கை குறித்துவிவாதிக்கப்பட்டது.இதையடுத்து 7-ஆவதுஊதியக் குழுபரிந்துரைகளை ஏற்கஅமைச்சரவையில் முடிவுசெய்யப்பட்டது. இதனால்அரசு ஊழியர்களின்அடிப்படை ஊதியம் 20சதவீதம் வரை உயருகிறது.இதுதொடர்பாக இன்றுமாலை அரசாணைவெளியிடப்படும் என்றும்இந்த ஊதிய உயர்வுஇன்னும் 2 நாட்களில்அமல்படுத்தப்படும் என்றுதெரிகிறது.

No comments:

Post a Comment