www.asiriyar.net

Monday 25 December 2017

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை சிறப்பு வகுப்பு

அரையாண்டு தேர்வு விடுமுறை துவங்கி உள்ள நிலையில், நாளை முதல், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை சிறப்பு வகுப்புகள் துவங்குகின்றன. பள்ளி மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வுகள் முடிந்து, டிச., 23 முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

> மீண்டும், ஜன., 2 முதல் பள்ளிகள் செயல்படும். இன்று, கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்து, நாளை முதல், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என, பல பள்ளிகள் அறிவித்துள்ளன. பொதுத் தேர்வு எழுத உள்ள, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.


மாணவர்கள் விருப்பப்படும் சில அரசு பள்ளிகளில் மட்டும், சிறப்பு வகுப்புகளை நடத்த, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment