www.asiriyar.net

Wednesday 6 December 2017

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம்

அரசு மேல்நிலைப்பள்ளிகளில், காலியாகஉள்ள இடங்களில்,தற்காலிக ஆசிரியர்களைநியமிக்க, தலைமைஆசிரியர்களுக்குஉத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில், 6,000க் கும்மேற்பட்ட, அரசு உயர்நிலைமற்றும் மேல்நிலைப்
பள்ளிகள்செயல்படுகின்றன.



இவற்றில்,25ஆயிரத்துக்கும் மேற்பட்ட,முதுநிலை பட்டதாரிஆசிரியர்கள், பிளஸ் 1,பிளஸ் 2 பாடங்கள்நடத்துகின்றனர்.பள்ளிகளில், 3,000க்கும்மேற்பட்ட முதுநிலைபட்டதாரி ஆசிரியர்பணியிடங்கள், காலியாகஉள்ளன. அதனால், பலபள்ளிகளில், பிளஸ் 1,பிளஸ் 2 மாணவர்களுக்குபாடம் நடத்துவதில், பாதிப்புஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, பள்ளிக்கல்விஅதிகாரிகள் ஆய்வு நடத்தி,காலியிடங்களைதற்காலிகமாக நிரப்ப,முடிவு செய்துஉள்ளனர்.

அதன்படி, அனைத்துமாவட்ட முதன்மை கல்விஅதிகாரிகளின்மேற்பார்வையில், அந்தந்தபள்ளி தலைமைஆசிரியர்களே, தற்காலிகஆசிரியர்களை நியமித்துகொள்ளலாம்.

மாதம், 7,500 ரூபாய் என,பெற்றோர் - ஆசிரியர்கழகம் வழியே, மாதசம்பளம் வழங்கவும்உத்தரவிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment