www.asiriyar.net

Monday 18 December 2017

ஜனவரியில் தொடர் மறியல் ஜாக்டோ - ஜியோ முடிவு

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், ஜனவரியில், தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என, அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது
.ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், சுப்பிரமணியன், மாயவன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் தலைமைச் செயலர் அலுவலகத்தில், கோரிக்கைமனு அளித்தனர்.
அவர்கள் அளித்த பேட்டி:

அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், 2016 ஜன., 1 முதல், ஊதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், 21 மாதம் நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது; அதை வழங்க வேண்டும். ஊதிய உயர்வில் உள்ள முரண்பாடுகளையும்,குறைகளையும் களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, அரசு நிறைவேற்ற வேண்டும்.

நிறைவேற்றாவிட்டால், ஜனவரி இறுதியில், சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடத்த, முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 comment: