www.asiriyar.net

Thursday, 16 November 2017

பள்ளி மாணவியருக்கு 'சட்ட சேவை பெட்டி'

மாணவியருக்கு சட்ட உதவி செய்வதற்காக, தமிழகத்தில் முதன்முறையாக, ராமநாதபுரம் மகளிர் பள்ளியில், 'சட்ட சேவை பெட்டி' திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், 'சட்ட சேவை பெட்டி' திறப்பு விழா நடந்தது. மாவட்ட நீதிபதி, கயல்விழி திறந்து வைத்தார்.

அவர் பேசுகையில், ''தமிழகத்தில் முதன்முறையாக, ராமநாதபுரம் பள்ளியில், சட்ட சேவை பெட்டி துவக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.
மேலும், சட்ட உதவிகளால் மக்கள் அடையும் நன்மைகள், பொதுமக்களுக்கான சட்டப் பணிகளில், மாணவியர் எப்படி உதவ முடியும் என்பது குறித்தும், நீதிபதி, கயல்விழி விளக்கினார்.

No comments:

Post a Comment