www.asiriyar.net

Thursday 15 February 2018

BSNL அதிரடி: ரூ.7/-க்கு 1ஜிபி மற்றும் ரூ.16/-க்கு 2ஜிபி; குட்பை ஜியோ.!!




சமீபத்தில் பிஎஸ்என்எல் அதன் ப்ரீபெய்ட் மொபைல்
வாடிக்கையாளர்களுக்கு 'பிஎஸ்என்எல் - போன்பே கேஷ்பேக் ஆஃபர் என்கிறவொரு திட்டத்தை அறிவித்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தும் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு 50% வரை கேஷ்பேக் சலுகைகால கிடைத்த வண்ணம் உள்ளது.

அதனை தொடர்ந்து மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் அதன் புதிய ப்ரீபெய்ட் திட்டமான 'மேக்ஸிமம்' வாய்ப்பை அதன் அறிவித்தது. இப்போது பிஎஸ்என்எல் மிகவும் சுவாரசியமான நன்மைகளை வழங்கும் இரண்டு மினி திட்டங்களை அறிவித்துள்ளது.
 இரண்டு "மினி பேக்" தரவு திட்டங்கள் அறிமுகம்
இரண்டு "மினி பேக்" தரவு திட்டங்கள் அறிமுகம்
அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், ஒரு நாள் செல்லுபடியாகும்அதன் இரண்டு 'மினி பேக்' தரவு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வரையறுக்கப்பட்ட கால சிறப்பு கட்டண வவுச்சர்களின் (எஸ்.டி.வி) ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்ட தரவுத் திட்டங்களாகும்.

மினி ரீசார்ஜ்
மினி ரீசார்ஜ்
இந்த இரண்டு திட்டங்களுமே அதிவேக 3ஜி இணையத்தை வழங்கும். இந்த புதிய பிஎஸ்என்எல் மினி ரீசார்ஜ் ஆனது ரூ.7 மற்றும் ரூ.16/- என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளன.

இரண்டாவதாக, பிஎஸ்என்எல் ரூ.16/- ஆனதும் ஒரு நாள் என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. ஆனால் இந்த திட்டம் 2 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவையு வழங்குகிறது. இமினி ரீசார்ஜ் ஆன ரூ.16/- ஆனது சந்தை நிலைமைகளின் அடிப்படையில் ரூ.19/- வரை விலை மாற்றம் பெறலாம்.

1ஜிபி மற்றும் 2ஜிபி
1ஜிபி மற்றும் 2ஜிபி
இணைய பயன்பாட்டை மிகவும் குறைவாக கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த மினி திட்டங்கள் சிறந்த தேர்வாகும். மற்றும் தங்களது தினசரி இணைய வரம்புகள் தீர்ந்து கூடுதல் தரவு தேடும் பயனர்களுக்கு இந்த மினி பொதிகள் பயனளிக்கும்.
மிகவும் மலிவான விலையின்கீழ் 1ஜிபி மற்றும் 2ஜிபி வழங்கும் பிஎஸ்என்எல்-ன் இந்த மினி தொகுப்புகளை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ அல்லது பார்தி ஏர்டெல் நிறுவனமும் மினி தொகுப்புகளை அறிவிக்கலாம்.

ஒரு வருடம் முழுவதும் நன்மை
ஒரு வருடம் முழுவதும் நன்மை
முன்னர் அறிமுகமான மேக்ஸிமம் திட்டத்தை பொறுத்தமட்டில், அது ஒர் ஆண்டு செல்லுபடியாகும் திட்டமாகும் மற்றும் இதன் விலை ரூ.999/- ஆகும். ரீசார்ஜ் செய்த தேதி முதல் - இரண்டு தொகுப்புகளாக - ஒரு வருடம் முழுவதும் நன்மைகளை அளிக்கும் இந்த புதிய மேக்ஸிமம் திட்டமானது என்.இ ஜம்மு & காஷ்மீர் மற்றும் அசாம் தவிர அனைத்து வட்டாரங்களிலும் பொருந்தும்.

கடுமையாக போட்டி
கடுமையாக போட்டி
தற்காலத்தில் அனைத்து ஆப்ரேட்டர்களிடமும் இருந்து கிடைக்கும் நன்மைகளை போலவே, இந்த திட்டம் குரல் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் தரவு நன்மைகளை வழங்குகிறது. உடன் பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து வெளியாகியுள்ள இந்தத் திட்டம் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவற்றின் நீண்டகால செல்லுபடியாகும் திட்டங்களுடன் கடுமையாக போட்டிபோடுகிறது.

'மேக்ஸிமம்' திட்டத்தின் நன்மைகள்
'மேக்ஸிமம்' திட்டத்தின் நன்மைகள்
பிஎஸ்என்எல்- ன் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, இந்த திட்டம் ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான டேட்டா என்கிற வரம்பை கொண்டுள்ள டேட்டாவை வழங்குகிறது. உடன் மும்பை மற்றும் தில்லி வட்டாரங்களை தவிர்த்து ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற இலவச குரல் அழைப்புகளையும் வழங்குகிறது.

வரம்பை தாண்டிய பின்னர் இணைய வேகம்
வரம்பை தாண்டிய பின்னர் இணைய வேகம்
உடன் நாளொன்றுக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. டேட்டா நன்மையை பொறுத்தமட்டில், 1ஜிபி என்கிற வரம்பை தாண்டிய பின்னர் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.அந்த வேகமானது வாட்ஸ்ஆப் செய்திகளை அனுப்பவும் பெறவும் போதுமானது.

ஆக வரம்பற்ற டேட்டா
ஆக வரம்பற்ற டேட்டா
ஆக இந்த திட்டமானது வரம்பற்ற தரவை வழங்குகிறது என்னது ஒரு நல்ல கூடுதல் விற்பனை புள்ளியாகும். மும்பை மற்றும் தில்லி பகுதிகளுக்கான குரல் அழைப்புகளுக்கு மட்டும் நிமிடத்திற்கு 60 பைசாக்கள் வசூலிக்கப்படும்.

அடுத்த 182 முதல் 365 நாட்களுக்கு
அடுத்த 182 முதல் 365 நாட்களுக்கு
மேலே குறிப்பிட்டுள்ள நன்மைகளானது ரீசார்ஜ் செய்யப்பட்ட முதல் நாளில் இருந்து, அதாவது 0 முதல் 181 நாட்களுக்கு முதல் தொகுப்பாக செல்லுபடியாகும். அடுத்த 182 முதல் 365 நாட்கள் வரையிலாக ஆன்-நெட் மற்றும் ஆப்-நெட் ஆகிய

இருவகையான அழைப்புகளுக்கும் நிமிடத்திற்கு 60 பைசா என்று வசூலிக்கப்படும்.

செல்லுபடியாகும் காலம் சிறியதாக உள்ளது.
செல்லுபடியாகும் காலம் சிறியதாக உள்ளது.
மேற்க்குறிப்பிட்டபடி, ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரு நிறுவனங்களுமே இதேபோன்ற ப்ரீபெய்ட் திட்டங்களை ரூ.999/-க்கு வழங்குகின்றன. மேலும் அவைகள் இதேபோன்ற நன்மைகளையும் அளிக்கின்றன. ஆனால் பிஎஸ்என்எல் திட்டத்தின் முன்ன அவைகளின் செல்லுபடியாகும் காலம் சிறியதாக உள்ளது.

No comments:

Post a Comment