www.asiriyar.net

Tuesday 3 October 2017

1,600 ஆசிரியர் பணியிடங்கள் முதுநிலையாக தரம் உயர்வு

அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 1,600 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், முதுநிலை பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டுஉள்ளன.

தமிழக அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அடிப்படையில், மாணவர்கள், ஆசிரியர் விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி, ஆகஸ்ட், ௩௧, நிலவரப்படி, அரசு உயர்நிலை பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், ௧,௬௦௦ பட்டதாரி ஆசிரியர் இடங்கள் உபரியாக கண்டறியப்பட்டு உள்ளன. எனவே, உபரியாக உள்ள இந்த ஆசிரியர்கள், தேவைப்படும் மேல்நிலை பள்ளிகளுக்கு முதுநிலை பணியிடங்களில் நிரப்பப்பட உள்ளனர். இதற்காக, 1,600 புதிய முதுநிலை பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இதன்படி, தமிழ், 180; கணிதம், 121; இயற்பியல், 241; வேதியியல், 247; உயிரியல், 33; தாவரவியல், 96; வரலாறு, 91; பொருளியல், 208; வணிகவியல், 383 இடங்கள் என, 1,600 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment